அருள்நெறித் தொடரின் ஆறாவது பகுதியாக பட்டினத்தார் - தாயுமானார் பாடல் பெருமை என்னும் இந்நூல் வெளிவருகிறது.
இந்நூலில் உள்ள பட்டினத்தார் பாடல் பற்றிய கட்டுரைகளிலே சில, சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளி வந்தவை; பல இதற்கென்றே எழுதப் பட்டவை. தாயுமானவர் பாடல் பற்றிய கட்டுரைகள் அனைத்தும், மேலே கண்ட பத்திரிகையில் வெளிவந்தவைகளே. சில திருத்தங்களுடன் இப்பொழுது நூல் வடிவில் வெளிவருகின்றன.
தமிழ் முரசில், தமிழர் அருள்நெறி என்னும் தலைப்பில், மெய்கண்டான் என்னும் பெயரில் என்னால் எழுதப் பட்ட கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்நூலில் உள்ள கட்டுரைகள்.
பட்டினத்தாரைப் பற்றி நமது நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள். அவருடைய பாடல்களைப் பலரும் படிக்கின்றனர். அவர் சொல்லியிருக்கும் வேதாந்தக் கருத்துகளைப் பலரும் போற்றுகின்றனர்.
தாயுமானவர் பாடலும் பிரசித்தமானவை. பலருக்கு அப் பாடல்களைப் பற்றித் தெரியும். பலர் தாயுமானவர் பாடல்களை உள்ளம் உருகிப் பாடுவதைக் கேட்கின்றோம்.
தாயுமானவர், பட்டினத்தார், இருவருடைய பாடல்களும் படிப்பதற்கும், பாடுவதற்கும் இனிமையானவை. பலர்க்கும் பொருள் விளங்கும் எளிய நடையில் இயன்றவை. தமிழ் மொழி, மக்களுக்குப் புரியும் வகையிலே - மக்களோடு இணைந்து எப்படி வளர்ந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவ்விருவர் பாடல்களையும் உதாரணமாகக் கொள்ளலாம்.
By:
Sami Chidambaranar Imprint: Nilan Publishers Dimensions:
Height: 229mm,
Width: 152mm,
Spine: 7mm
Weight: 181g ISBN:9788168632387 ISBN 10: 8168632389 Pages: 128 Publication Date:01 May 2026 Audience:
General/trade
,
ELT Advanced
Format:Paperback Publisher's Status: Active