Beat the rise! Delivery fees are going up soon. INFO

Close Notification

Your cart does not contain any items

Ondre Ondru

Ki Va Jagannathan

$16.95

Paperback

Not in-store but you can order this
How long will it take?

QTY:

Tamil
Nilan Publishers
01 May 2026
பதினோராந் திருமுறை என்ற பெயரே சைவத் திருமுறைகளைக் கோவை செய்து வரிசைப்படுத்தி அமைத்த செயலைக் குறிப்பிக்கிறது. இதற்கு முன் பத்துத் திருமுறைகள் உள்ளன என்பதை இப்பெயர் அறிவிக்கிறதல்லவா? நம்பியாண்டார் நம்பிகள், பதினொரு திருமுறைகளைத் தொகுத்தார். பதினோராந் திருமுறையில் ஆலவாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை முதலில் வைத்துப் பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய திருவொற்றியூர் ஒருபா ஒருபஃதை இறுதியாக வைத்து 31 பிரபந்தங்களைத் தொகுத்தார். பிறகு அரசன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்துப் பிரபந்தங்களையும் பிறர் சேர்த்தனர்.

இத்திருமுறையில் பன்னிரண்டு அருளாளர்கள் பாடிய 41 நூல்கள் இருக்கின்றன. 1388 பாடல்கள் இப்போது கிடைக்கின்றன.சில நூல்களிற் சில பாடல்கள் கிடைக்கவில்லை. இந்த நூல்களை இயற்றிய திருவருட் செல்வர்கள் திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவர், கல்லாடனார், கபில் தேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி என்போர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரையில் எழுந்தருளி யிருக்கும் இறைவர் என்றும், அப்பெருமான் பாணபத்திரருக்காகச் சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பாசுரவடிவில் ஒரு திருமுகத்தை வரைந்து அளித்தாரென்றும், அதுவே திருமுகப் பாசுரமென்ற பாடலென்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
By:  
Imprint:   Nilan Publishers
Dimensions:   Height: 229mm,  Width: 152mm,  Spine: 5mm
Weight:   145g
ISBN:   9788168604216
ISBN 10:   8168604210
Pages:   102
Publication Date:  
Audience:   General/trade ,  ELT Advanced
Format:   Paperback
Publisher's Status:   Active

See Also